பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், முதுகலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணத்தில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் வியாழக்கிழமை பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.